Sunday, April 05, 2020

மாண்புமிகு பிரதமர் அவர்களே!

Mr.மோடிஜீ!

ஏன் பொய் சொல்கிறீர்..??

நீங்கள் உலகின் முன்மாதிரியா????

மாண்புமிகு பிரதமர் அவர்களே!
கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை உலகமே பின்பற்றுவதாக ஒரு மகா பொய்யை....

எப்படி வெட்கமே இல்லாமல் உங்களால் சொல்ல முடிகிறது?????

நீங்கள் எப்படி உலகின் முன்னோடி என சொல்கிறீர்கள்???

உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் CAA சட்டங்களை நடைமுறைப் படுத்தியதால்.....

மக்கள் வெகுண்டெழுந்து போராடியதால்......

வடகிழக்கு மாநிலங்களில் உயிர்ப்பலிகள் விழத் தொடங்கிய  அந்த  நாட்களிலேயே.....

ரஷ்யா  சீனாவுடனான தனது அனைத்து  எல்லைகளையும் மூடி..... கொரோனாவிற்கு எதிரான தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது!!!!!

CAA விற்கு எதிராக எத்தனை  போராட்டங்கள் நடைபெற்றாலும்....

எந்தக் காரணத்தைக்  கொண்டும் CAA  NRC சட்டங்கள்  வாபஸ் வாங்கப்படாது....

என நீங்கள் நீட்டி முழங்கிய போதுதான்.....

ரஷ்யா கொரோனா பரவாமலிருக்க தனிமைப் படுத்தப்பட்ட மண்டலங்களை உருவாக்கியது!!!

லெனின் செஞ்சதுக்கம்...  தியேட்டர்...
மால்..
உடற்பயிற்சி கூடங்களை மூடத்  துவங்கி விட்டது!

நீங்கள் டிரம்புடன் நமஸ்தே நிகழ்ச்சி நடத்திய காலங்களில்தான்.....

ரஷ்யா
ஏப்ரல் 22ல்....
நடைபெற இருந்த அடிப்படை சட்ட மாறுதலுக்கான  பொதுவாக்பெடுப்பைக் கூட தொலைநோக்குப் பார்வையோடு தள்ளி வைப்பதாக அறிவித்தது!!!!

சிங்கப்பூர் அரசு  தொழுகைகளை தவிர்க்கவும்....

தொழுகைக்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்றவும்.....

கை குலுக்காமல் இருக்கவும்  அறிவுறுத்தி  இருந்தது!

தப்லீக் ஜமாத் விழா சிறப்பு ௮ழைப்பாளர்களான
தாய்லாந்து இசுலாமியர்களை.....

நீங்கள் எந்த பரிசோதனையும் இல்லாமல் உள்ளே நுழைய அனுமதித்து.....

கோட்டை விட்டிருந்த அதே காலக் கட்டத்தில் தான்.....

ரஷ்யா வெளிநாட்டினர் யாரும் ரஷ்யாவின் உள்ளே நுழையத்  தடை விதித்து  முடித்திருந்தது!!!!

சென்ற மாதம் நீங்கள் மான்கீபாத்தில் வீர உரை ஆற்றிக்  கொண்டிருந்த காலத்தில்தான்....

ரஷ்யா 500 பேர் கொண்ட சிறப்பு மருத்துவமனையையும்.....

கொரோனா நெருக்கடி காலத்தில் ராணுவம் செயல்பட வேண்டிய முறை பற்றிய ஒத்திகையையும் முடித்திருந்தது!!!!

WHO பலமுறை வற்புறுத்திய பின்பு....

ஒருநாள் ஊரடங்கைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருந்த போதுதான்.....

ரஷ்ய அதிபர் கொரோனாவை நாங்கள்   கட்டுக்குள்  வைத்துள்ளோம்...  கடவுளுக்கு நன்றி.... என மக்களிடம் உரை ஆற்றிக் கொண்டிருந்தார்!!!!

சிங்கப்பூர் ஒவ்வொரு வீட்டிற்கும் நான்கு முகக் கவசங்களை விநியோகித்து முடித்திருந்தது!!!!

நீங்கள் திடீரென 21 நாள் ஊரடங்கை அமுல்படுத்தி....

எங்களை 700.... 800 கிமீ நடந்தே சென்று சாகப் பணித்தீர்களே.....

அதற்கும் பல நாட்களுக்கு முன்பே....

ரஷ்யா,  தென்கொரியா போன்ற நாடுகள் படிப்படியாக ஊரடங்கை அமுல்படுத்தவும்.....

தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் 144 ஐ அமுல்படுத்தும் முன்பு எத்தனை நாட்கள் மக்களுக்கு அவகாசம் தரலாம் என்றும் சிந்திக்கவும் தொடங்கி விட்டது......

தென்னாப்பிரிக்கா நான்கு நாட்கள் மக்களுக்கு அவகாசம் கொடுத்தது!!!!!

நீங்களும்.....
உங்கள் ஆதரவு முதல்வர்கள்.....  அமைச்சர்கள்....  ஆளுநர்கள்.....
என பலரும் கையில் தட்டு கரண்டியுடன் சப்தம் செய்து....
மணி அடித்து கொண்டிருந்த வேளையில்....

தென்கொரியா தினமும்
10000 பேருக்கு பரிசோதனை செய்யத்  துவங்கியிருந்தது!!!!

ஹாங்காங் 14900 பேருக்கு பரிசோதனை செய்து....

19 பேருக்கு மட்டும் கொரோனா  இருந்ததாக  அறிவித்து  முடித்திருந்தது!!!!

உங்கள் நிதி அமைச்சர்....

இன்றுவரை
ஒரு ரூபாயும் எனக்கு வராத....
உருப்படாத திட்டங்களை.....
மனசாட்சியே இல்லாமல் அறிவித்த போது....

அமெரிக்கா ஒவ்வொரு அமெரிக்க பிரஜைக்கும்  90000 ரூபாய்....
மற்றும் ஒவ்வொரு  குழந்தைக்கும்  38000 ரூபாய்.....
உட்பட ஏறக்குறைய
165 லட்சம் கோடி  ரூபாய்களை....

கொரோனா நிவாரண நிதியாக  ஒதுக்கியிருந்தது!!!!

பிரதமரே!

நீங்கள் இன்று.... எங்களை
9 மணிக்கு.....
9 நிமிடம்....
விளக்கை அணைக்க  சொல்லிக் கொண்டிருக்கும்  போது.....

ரஷ்யா  150000 பேர்களுக்கு பரிசோதனை செய்து....
வெறும்
253 பேர்களுக்கு கொரோனா இருந்ததை அறிவித்த கையோடு.....

ஒரு வார முழு சம்பளத்தோடு ரஷ்யா முழுதும்  ஊரடங்கை  அறிவித்து விட்டது!!!!

உங்களின் தோழரும்.... கோமாளியும்.... இனவெறித்
திமிர்  பிடித்தவருமான டிரம்ப்....

தனது பரம்பரை எதிரிகளான....

சீனா,  ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான உதவிகளை கேட்டுப் பெற்றும் விட்டார்!!!!

மேலும் அடுத்த இரண்டு வாரங்களும்  அமெரிக்காவிற்கு  பெரும்  சோதனையான காலம் எனவும்,
2,40,000 பேர் வரை கொரோனாவால் இறக்கக் கூடும்  என்றும்....
மருத்துவ ஆய்வுகளை முடுக்கி  விட்டுள்ளதாகவும்....
வெண்டிலேட்டர்  பற்றாக்குறை  உள்ளதையும்.....  பிறநாடுகளில் இருந்து பெறுவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும்.... வெளிப்படையாக அறிவித்துள்ளார்!!!!

நீங்கள் என்றாவது கொரோனா இந்த நாட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்.....
என இதுவரை ஆய்வு செய்து மக்களுக்கு கூறியுள்ளீரா???????

பிற நாடுகளிலிருந்து பேரளவிலான உதவிகள் எதையாவது பெற்றுள்ளீரா??????

எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்படும் என கணித்துள்ளீர்களா?????

அதை எங்களுக்கு சொல்ல  நினைத்ததுண்டா????

இப்படி எதையும் சொல்லாமல்  விளக்கேற்றச் சொல்லும்  பிரதமரே....

இப்போது சொல்லுங்கள்.....

எதனால் உலகம் உங்களை பின்பற்றுவதாக  சொல்கிறீர்...?????

எந்த முன் ௭ச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத மூடத்தனத்தையா??????

திடீரென நான்கு மணி நேர அவகாசத்தில் அறிவித்த ஊரடங்கையா?????

பெரும்பாலான மக்களுக்கு பத்து பைசாவிற்கு உதவாத நிவாரணங்களையா????

பாத்திரங்களை தட்டி சத்தம் செய்ததோடு...

தெருவில் இறங்கி ஆட்டம் போட்ட  கோமாளித் தனத்தையா??????

பரிசோதனை செய்யப் பட்டவர்கள் சதவிகிதத்தில்.....  பாகிஸ்தானை விட குறைவாக உள்ளோமே அந்த நிலையையா????

பல லட்சம் மக்கள்....
பல நூறு கிலோமீட்டர்.....
நடந்தே செத்தார்களே.... அதையா?????

இல்லை எல்லாப் பிரச்சனையும் இசுலாமியரால் வந்தது....
என்று மக்கள் பொது புத்தியில் திணிக்க பாடாய் படுகிறீர்களே......
அந்த அசிங்கத்தையா???????

சொல்லுங்கள் பிரதமர்....

எந்த விடயத்தில் நீங்கள் உலக நாடுகளுக்கு....

முன்மாதிரியாக இந்த நாட்டை வழி நடத்தியுள்ளீர்கள்?????

சொல்லுங்கள்....  Mr_FRAME_MINISTER!

பகிர்வும் ௭ன் சில சேர்ப்புகளும்!

via whatsapp

No comments: