Friday, August 27, 2021

வாழ்க்கை வாழ்வதற்கே!

 


ஒருவர் முதலில் சிறியதாக 

*மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*.

பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.*

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது.

*வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.*

வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்.

*ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.*

*ஏன் என்னாச்சு.?*

பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.*

எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?*

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.*

அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.

 *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.*

அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். 

*அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்*.

அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். 

*சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.*

அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. *குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.*

அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.

*தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.*

அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார். 

*இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.*

சத்தம் இல்லாமல் கதவை மூடினார். *மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.*

*ஐயா* சாப்பிட ஏதாவது வேணுமா.? *பணியால் கேட்டான்.*

வேண்டாம் என்று சொல்லிவிட்டு. 

*அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.*

உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். *இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்*.

பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல். 

*அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.*

கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி. 

இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். *இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.*

அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது. 

*கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?*

யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? *என்று கேட்டார்*.

அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. *உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்*.

*அவர் திடுக்கிட்டுப் போனார்.*

*அய்யாசாமி* நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். *இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.*

அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் *செல்வத்தை* *எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்*.

மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. *அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.*

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. 

*என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.*

*அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.*


அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 

அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். 

*சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.*

மரண தேவதை ஒப்புக்கொண்டது.

*அவர் இப்படி எழுதினார்.*

உங்களுக்கான நேரத்தை. 

*சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.*

என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.

 *எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.*

இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் *ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*

அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. 

*அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.*

விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். *பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.*

*ஐயா* ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. *பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.*

அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் *மேஜையை பார்த்தார்.*

அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. 

*பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன*

ஆதலால்

தயவுசெய்து வாழ்க்கையை வாழுங்கள்,நொடிக்கு நொடி கொண்டாடுங்கள், பேரானந்தமாக இருங்கள்,மனைவி,குழந்தை,கணவன்,அப்பா, அம்மா,உடன்பிறந்தவர்கள்,நண்பர்கள்,ஆடு,மாடு,கோழி,வயல்வெளி,பூச்செடி இப்படி எல்லாவற்றிற்கும் நிறைய நிறைய நிறைய நேரங்களை ஒதுக்கி  வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசனையோடு அணு அணுவாக ரசித்து ரசித்து ஜாலியாக வாழ முடிவெடுங்கள் நண்பர்களே 😍🙏🏻

Via FB

Friday, August 20, 2021

மனித உரிமை ஆர்வலர் போல வேசம் போட்டு..


பர்மாவில் புத்த அரசால கொத்து கொத்தாக அப்பாவி முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஈராக்கில் அயோக்கிய அமெரிக்க அரசால் கொத்து கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஆப்கானில் இருபது வருடமாக அங்கே உள்ள பூர்வ குடிகளான முஸ்லிம்களைக் கொன்று அடிமைப் படுத்தி வைத்து அங்கே கொள்ளை அடித்துக் கொண்டு இருந்த அயோக்கிய அமெரிக்காவைக் கண்டிக்காதவர்கள் சிரியாவில் ரஷ்யா பொம்மை ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்கா ஆயுதப் படைக்கும் ஏற்பட்ட பகையில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஒரே நாளில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு (தண்ணீரூற்று) உட்பட இலங்கையின் வட மாகாணமாக இருந்த முஸ்லிம்கள் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் கையில் வெறும் ஐநூறு ரூபாய் பணத்துடன் துரத்தி அடிக்கப் பட்ட போது பேசாதவர்கள்

பாலஸ்தீனத்தில் அகதியாக வந்து தங்க இடம் கொடுத்த பூர்வ குடிகளான முஸ்லிம்களைக் கடந்த பல ஆண்டுகளாக கொன்றொழித்துக் கொண்டு இருக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளை கண்டித்துப் பேசாதவர்கள்

சீனாவில் கடவுள் மறுப்பு கம்யூனிச அரசால் அப்பாவி முஸ்லிம்களாக  இருக்கும் சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெண்கள் வரை துடிதுடிக்கக் கொடுமைப் படுத்தப் பட்டு ஆண்கள் வதை முகாம்களில் கொடுமைப் படுத்தப்பட்டு

இஸ்லாத்தைக் கைவிட்டு விட வற்புறுத்திய போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தவர்கள்

உலகத்தின் குப்பைக் கிடங்காகச் சோமாலியாவை மாற்றி அங்குள்ள முஸ்லிம் மக்களை அடிமைப் படுத்திய அயோக்கிய அமெரிக்காவை கண்டிக்காதவர்கள்

இன்னும் ஏமன், லெபனான், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி  வல்லா திக்க நாடுகள் சுரண்டி அங்குள்ள முஸ்லிம் மக்களை பாதிப்படையச் செய்யும் போது கண்டிக்காதவர்கள்

இங்கே இந்தியாவில் கேவலம் மாட்டுக்காகப் பல அப்பாவி முஸ்லிம்கள், தலித்துகள் அடித்தே கொல்லப் படும் போது வேடிக்கை பார்த்தவர்கள்

ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களை அடித்தே கொன்ற போது கண்டு கொள்ளாமல் கடந்து சென்றவர்கள்

இன்று தாலிபான் என்ற மண்ணின் பூர்வ குடிகள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு அமெரிக்காவைத் துரத்தி அடித்துக் கைப்பற்றியதும்

திடீர் என்று மனித உரிமை ஆர்வலர் போல வேசம் போட்டுப் பேசுவதும் பக்கம் பக்கமாகக் கட்டுரை எழுதுவதும் , அய்யய்யோ இனிமே தாலிபான் அந்த நாட்டை சீரழித்து விடுவார்களே என்று ஜோசியம் சொல்லுவதும் திடீர் கவலை கொள்வதும் பார்க்க அவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது...

தாலிபான் எப்படி ஆட்சி செய்ய போறாங்க என்று அந்த நாட்டில் உள்ள மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.... அதைப் பற்றி இவர்கள் திடீர் என்று கவலை கொள்வது அங்கே உள்ள மக்களை நினைத்து இல்லை, இங்கே உள்ள முஸ்லிம் மக்களின் மேல் உள்ள வெறுப்பு

தாலிபான் ஒழுங்கா ஆட்சி செய்வானா அல்லது மக்களைப் பாதிக்கும் ஆட்சி செய்வானா என்று இப்போதே ஜோசியம் எல்லாம் சொல்ல வேண்டாம்,...

அவன் ஒழுங்கா ஆட்சி செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், இல்லை என்றால் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஒரு நல்லாட்சி அமையும்,

இதை வைத்து இங்கே அண்ணன், தம்பி, மாமன், மச்சானாக வாழும் இந்து முஸ்லிம் மக்களிடையே பாருங்க முஸ்லீம் என்றாலே இப்படித்தான் என்று கலவரம் உண்டாக்கும் வேலையை கை விட்டு விட்டு உங்கள் ஜோலியை போயி பாருங்க....

ஏனென்றால் இஸ்லாத்துக்குத் தாலிபான் அத்தாரிட்டி இல்லை, குர்ஆனும் ஹதீஸும் தான் எங்களுக்கு வழிகாட்டல்...

-WA: Habeeb Kashifi. . . . . . . .

தாலிபான்கள் கண்களை மூடிக் கொண்டு கையை உயர்த்தி ஆடைகளில் வேடங்கள் தரித்து உண்டு உறங்கி போதனை செய்து கொண்டு வெற்றி அடையவில்லை.

தங்கள் வாழ்க்கையை, இன்ப துன்பங்களை விட்டு, உழைத்து, இரவு பகல் உறங்காது, சரியான உணவு இல்லாது தம் நாட்டை ஆக்கிரமித்துள்ளவன் அறிவியலில் எந்த அளவு முன்னேறி இருந்தாலும் விடமாட்டேன் எனப் போரிட்டு வென்றவர்கள்.

இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேடை ஏறிப் பிடிக்காத நபரைக் குற்றம் சொல்லிப் பேசுவதும், இளைய சமுதாயத்தவரை கல்வி அறிவு உடல் பலத்தை அதிகரிக்காது மடமையாக்குவதும், பதவி கிடைக்காவிட்டால் வாழ்ந்த வீட்டைத் தீயிட்டும் கொளுத்துபவர்களுக்கும், அமெரிக்கத் தீவிரவாதத்திற்கும் வேறுபாடு இல்லை.

ஒன்று பட்டுச் சரியான திட்டம் தீட்டி ஒற்றை தலைமை ஏற்றுப் போரிட முடியாத கூட்டம் வாழத் தகுதியற்றது எனக் காலம் சொல்லும்.

நேற்று பிறந்த காளான்களை விட்டு விட்டு ஆல மரங்களைப் பிடித்து வாழ முன்வரத் தாயாரா?

ஆட்டு மந்தைகளாய் நுனி புல் மேயாமல் சிங்கமாய் வாழ மனம் உள்ளதா?

அதற்கான உங்கள் முயற்சி என்ன?

Via WhatsApp.

Monday, August 16, 2021

75th Independance Day

 1997 - ஆம் ஆண்டு இந்தியாவின் 50வது சுதந்திர தினத்தை அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி பொன்விழாவாக கொண்டாடினார் 

அப்போது இந்தியாவின் விடுதலைக்கு போராடி இரத்தம் சிந்திய - சிறை சென்ற தியாகிகள் அடங்கிய கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது அதில் முஸ்லிம் தியாகிகளின் ஒரு பெயர் கூட இடம் பெறவில்லை கலைஞர் முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்தார், அல்லது மறந்தார் என்கிற குற்றசாட்டு எழுந்தது 

அதே போன்று நேற்று நடந்த இந்தியாவின் சுதந்திர தின 75- ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் - தனது உரையில் சில தியாகிகளின் பெயர்களை குறிப்பிட்டார் - ஆனால் ஒரே ஒரு முஸ்லிம் தியாகியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை . 

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த - மதுரை நாயகம் யூசுஃப் கான் , நேதாஜி ராணுவப் படையில் இருந்த அமீர் ஹம்சா , வ.உ.சி க்கு கப்பல் வாங்கிக் கொடுத்த வள்ளல் ஹபீப் முஹம்மது - போன்ற பல தியாகிகள் - முஸ்லிம் சமூகத்தில் இருந்தனர் 

இந்திய சுதந்திரத்தை பெற்று தந்ததில் தங்களின் சக்திக்கு மீறி செயல்பட்டவர்கள் முஸ்லீம்கள் ( பார்க்க நேற்றைய எனது பதிவு ) இப்படிபட்ட முஸ்லீம் தியாகிகளின் வரலாற்றை தந்தையும் , மகனும் மறைத்து விட்டார்கள் அல்லது மறந்து விட்டார்கள் தந்தை வழியில் மகனும் செல்கிறாரோ.? என்கிற சந்தேகமும் , குற்றசாட்டும் , பழியும் இப்போதும் எழுந்துள்ளதே ! 

உண்மையிலேயே மறைக்கப்பட்டதா ? 

வேண்டுமென்றே  மறக்கப்பட்டதா ? 

உணர்ச்சிவசப்படாத , திட்டி குட்டையில் வராத , திமுக கட்சிக்காரர்களிடமிருந்து சரியான விளக்கம் அல்லது பதில் எதிர்பார்க்கிறேன்… பலரின் புரிதலுக்காகவே இந்த பதிவு.

-தக்கலை கவுஸ் முஹம்மத்