Tuesday, November 24, 2020

ஒரு வங்கிக் கொள்ளை!

மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்.

"இந்தப் பணம் #அரசுக்கு_சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர், உங்களுக்குச் சொந்தமானது. அதனால், யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்..!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள்" என்று மிரட்டியவுடன், படுத்துவிட்டார்கள்.

மனதை மாற்றும் முறை என்பது இதுதான்.

*"This is called 'Mind Changing Concept' Changing the conventional way of thinking."*


அங்கே ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், "இங்கு நடக்க போவது கொள்ளை.. கற்பழிப்பு அல்ல.." என்று மிரட்டி, அவளை அமர வைத்தான்.

இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் 

*"Being Professional & Focus only on what you are trained"*


கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன், கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான். "வாருங்கள்.. சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்.." என்று.

மற்றொருவன் சொன்னான், "பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது. நேரம் அதிகம் செலவாகும். நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று அரசே நாளைய செய்திகளில் சொல்லி விடும்.

இதைத்தான், படிப்பை விட  அனுபவம் சிறந்தது என்போம்..!

*"This is called 'Experience' Nowadays, experience is more important than paper qualifications..!"*


கொள்ளை நடந்தபோதே, வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவருடைய உயர் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.

"வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.

"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது இது தான்.

*"This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours."*


இதை கேட்ட மற்றொரு அதிகாரி " வருடம் ஒரு கொள்ளை, இவ்வாறு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..??!!" என்றார்.

இதுதான் சுயநலமான உலகம்..!

*"This is called Killing boredom World. Personal happiness is much more important than your job."*


மறுநாள் செய்திகளில், வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி. ஏனென்றால் அவர் பங்கு 50 கோடி..

கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து, பணத்தை எண்ணத் தொடங்கினர் .

எவ்வளவு எண்ணியும், அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை.

கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து, "நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்த வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், 80 கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_ இதற்குத் தான் படித்திருக்க வேண்டும்.."என்றான்.

*"True. Knowledge is nowadays very important than money in this world."*


#நம்_நாடு இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும் தான் ஆளப்படுகிறது..!#பாவம்_மக்கள்..!

*-படித்ததில் பிடித்தது-*

Saturday, October 31, 2020

அம்மா!

 அம்மா மகன் ௨றவு


தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக..

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்.

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான் 

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..

Friday, August 28, 2020

🙏உறவுகளுக்கும் நட்புகளுக்கும் மதிப்பளிப்போம்.❤️

 ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான்.

அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான்.

கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார்.

கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார்.

டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கும் வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர்.

கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார்.

சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.தான் கொடுத்த 500 ரூபாய் ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.

வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி வந்ததில் நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.

இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.

ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா?

அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா?

ஆகையால் சொந்தங்களே பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே நட்பு உறவு இதற்கு மதிப்பளிப்போம்.

படித்ததில் பிடித்தது 👌👌

via web

Monday, April 13, 2020

அறிவியலை அதிர விடும் திருக்குரான்.

வணக்கம்

(அறிவியலை அதிர விடும் திருக்குரான்) சவால் 11

ஈக்கள் (Flies) பற்றி திருக்குரானில் அத்தியாயம் 22ல் மொத்தம் 78 வசனங்களில் 73வது வசனம் உலக மனித சமூகங்களுக்கும் , அறிவியல் உலகத்துக்கும் ஒரு சவால் விடுகிறது.

Image may contain: flower  Image may contain: one or more people, house and outdoor




11வது சவாலாக என் கட்டுரையில் அதை குறிப்பிட்டு ஈக்களை பற்றி ஆய்வு செய்த அமெரிக்க கார்னெல் யூனிவர்சிட்டிக்கு (American Karnel Institutes) மெயில் அனுப்பி இது சம்மந்தமாக ஆய்வு அறிக்கையை பெற்றேன்.

People, an example is presented, so listen to it, indeed those you invoke besides Allah will never create as much as a fly,
Even if they gathered together for that purpose. And if the fly should steal away from them a tiny thing, they couldn't recover it from him. Weak are the pursuers and pursued.
(Thirukuran Chapter 22 verson 73)

Image may contain: indoor


இப்படி ஒரு வசனம் திருக்குரானில் உள்ளது. இதன் அர்த்தம் நீங்கள் புரிந்து கொள்வதற்காக....

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரால் இதை சொல்ல முடியுமா? முஹம்மது நபி அவர்கள் மக்களை பார்த்து இறைவன் சொல்கிறான் நான் சொல்வதை கேளுங்கள் இறைவனை தவிர நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் ஒரு ஈயை கூட உங்களால் படைக்கமுடியாது.

உங்களிடம் இருந்து ஈ ஒரு பொருளை எடுத்து போய் விட்டால் அதை உங்களால் திருப்பி பெறமுடியாது.

ஈக்களை பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றது. அமெரிக்கா கார்னல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வல்லுனர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஈக்களை ஆய்வு செய்து ஆய்வறிக்கையில் ஒரு ஈ ஒரு பொருளை தூக்கி சென்று விட்டால் அதை மீண்டும் பெறமுடியாது.

காரணம் ஈக்கள் என்ற உயிர் இனத்துக்கு பற்கள் கிடையாது. நீர் போன்ற உணவுகளை தனது வாயில் உள்ள இஸ்பான்ச் போன்ற உறுப்பால் உறுஞ்சி கொள்ளும். திடமான உணவுகளை தனது வாயில் உள்ள ஒரு வித உமிழ் நீரை செலுத்தி அதை கரைத்து நீர்ம நிலைக்கு மாற்றி உறிந்து தனது வயிற்றுக்குள் செலுத்தி விடும்.

ஒரு சிறிய பொருளை பெரிய பொருளாக காட்டக்கூடிய மைக்ராஸ் கோப் கருவி மூலம் காணக்கூடிய 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை 1400ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேதத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது ஒரு விந்தை.

ஈ ஒரு பொருளை தூக்கி சென்று விட்டால் அதை நம்மால் மீண்டும் பெற முடியாது என்பது அறிவியல் உண்மை தான், ஆனால் இதை திருக்குரான் 1400ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வது?

22நாட்களில் நான் எனது கட்டுரையை எழுதி அந்த குழுவினரிடம் சப்பிட் செய்து விட்டேன். 267பக்கம் கட்டுரை, சப்போர்ட் டாக்குமெண்ட் அதன் கமெண்ட்ஸ் 167பக்கம்.

132பேர் எழுதிய கட்டுரையில் தேர்வு குழுவினர் 13பேரும் என் கட்டுரையை தான் முதல் பரிசு என்று கமெண்ட்ஸ் எழுதி,
எனக்கு பரிசு கொடுக்கும் வரை நான் திருக்குரானில் பி ஹச் டி வாங்கிவள் என்பது அவர்களுக்கு தெரியாது.

நான் எழுதிய (அறிவியலை அதிர விடும் திருக்குரான்) இந்த கட்டுரை ஆங்கிலத்தில் ஒரு போர் களம் போல் அமைத்து எழுதினேன்.

நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதை இப்படி பதிவு செய்கிறேன்.
Image may contain: 1 person, close-up
(அன்புடன் வாசுகி மோகன்) <<click here for her post

(சீக்கியர்கள் சபதம்)




வணக்கம் (சீக்கியர்கள் அணியும் தலைப்பா, கை வளையம் பொற்கோவிலில் சீக்கியர்கள் சபதம் எடுத்து இந்திய முஸ்லீம்களை பழி வாங்க போடப்பட்டது) வரலாற்றை புரட்டி போட்ட உண்மை...... என் தமிழ் சமூகம் அறியாத உண்மை. சீக்கியர்களுக்கு வேதம் என்பது கிடையாது. வேத நூல்கள் தான் உண்டு.பத்தாவது மத குரு கோவிந்த் சிங் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடுமையான முறையில்  கொல்ல படுகிறார். அவுரங்கசீப் ஆட்சி காலத்தில். தனது பத்தாவது மத குரு கோவிந்த் சிங் கொலைக்கு அவ்ரங்கசீப் தான் காரணம் என்று வதந்திகள் பரப்பப்பட்டு கொதித்து எழுந்த சீக்கியர்கள் அவர்களது புனித கோயிலான பொற்கோவினில் பல ஆயிரம் சீக்கியர்கள் ஒன்று கூடி  சபதம் எடுத்து தலையில் தலைப்பா, கையில் வளையம் இட்டு எங்கள் மத குரு கோவிந்த் சிங் கொல்ல பட்டதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் அவர்களை பழி வாங்கும் வரை ஓய மாட்டோம் இப்படி தான் அவர்களது உடைகள் மாறியது............. காலங்கள் உருண்டோடின. 1618ம் ஆண்டு சர்சிங் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி அவரது குழுவோடு பத்தாவது மத குரு கோவிந்த் சிங் கொலை விசாரணை தொடங்குகிறது விசாரணையில் மத குரு கொல்ல பட்ட நாட்களில் அவ்ரங்கசீப் பிசாப்பூர் என்ற இடத்தில் இருந்ததாகவும் மத குரு கொலைக்கும் அவ்ரங்கசீப் என்பவருக்கும் தொடர்பு இல்லை.... அவ்ரங்கசீப் ஆட்சி காலத்தில் துணை மந்திரியாக இருந்த ஒரு இந்து மத வெறியன் ராம்ஜித் பட்லா என்பவன் மத குரு கோவிந்த் சிங்கை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்ததாகவும் 13 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் என்ற வரலாற்று உண்மையை நீதிபதி சர்சிங் குழுவினர் ஆதாரத்தோடு நிரூபித்து..... பத்தாவது மத குரு கோவிந்த் சிங் அவர்களின் புனித நூலான குர்மந்திர் சாஹேப் என்ற நூலின் கடைசி பக்கத்தில் வருங்கால வாரிசுகள் இந்த வரலாற்று உண்மையை அறிவதற்கு பதிவு செய்து உள்ளனர். உண்மையை உரக்க சொல்வோம் துணிந்து சொல்வோம்
. (அன்புடன் வாசுகி மோகன்)

For the 1st time, Let's post #Pray_for_America

அமெரிக்காவில் கொத்துக்கொத்தாக மரணம்

#சாலையெல்லாம்_பிணங்கள்

கொத்துக்கொத்தாக அமெரிக்காவில் மரணம்.. நேற்று மட்டும் ஒரே நாளில் 1255 நபர்கள் மரணம். (7/4/2020)
நேற்றைய நாளில் புதிதாக கொரோனா நோயால் புதிதாக பிடிக்கப்பட்டவர்கள் மட்டும் 30,000

இன்றைய அமெரிக்க தலைமுறை மக்கள்,  அமெரிக்கா அல்லாத வெளிநாட்டில் அமெரிக்கர்களால் கொல்லப்படும் செய்தியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். முதல்முறையாக அமெரிக்கர்களின் கண்ணீரையும், கதறலையும் பார்க்கிறார்கள்..

ஒவ்வொரு முறையும் பிற நாடுகளில் கொத்து கொத்தாக கொலை செய்து விட்டு, அன்றைய தினம் மகிழ்ச்சியோடு உறங்கிய மக்களுக்கு, தன்னால் அழிக்கப்படும் இடங்கள் என்னவெல்லாம் வேதனைப்படும் என்பதை முதல்முறையாக தன் சொந்த நாட்டிலே பார்க்கிறார்கள்.

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்ப்பட்ட மரணத்தை விட, அமெரிக்கர்களால் இந்த உலகத்தில் இறந்து போன பொதுமக்கள்தான் அதிகம்..

ஈராக், ஈரான், மியான்மர், வியட்நாம், கியூபா, மெக்சிக்கோ, வெனிசுலா, லெபனான், பாலஸ்தினம், வட கொரியா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாடுகளுக்கு எல்லாம் மருத்துவத்தடை விதித்த நாடு அமெரிக்கா..

அதாவது மருத்துவத்தடை என்றால், எந்த நாட்டு மருத்துவர்களும் இந்த நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்யக் கூடாது. மேலும் இந்த நாடுகளுக்கெல்லாம் மருந்து பொருட்கள் கொடுக்கக்கூடாது. மருத்துவம் சம்பந்தமான எந்த சிறு உபகரணங்கள் கூட கொடுக்கக் கூடாது என்றே தடை. எத்தனை பெரிய கொடுரமான தடை என்று நீங்கள் உணருங்கள்.

அதன் கொடுரத்தை இன்று அமெரிக்காவே உணர்ந்துள்ளது. மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் இந்தியாவிடமும் கையேந்தி விட்டது..  சீனாவிடம் கையேந்தி விட்டது.. மருந்து பொருட்கள் தடையால் பிற நாடுகள் எவ்வளவு பாதிக்கப்பட்டுருக்கும் என்பதை தன் பாதிப்பில் பாடம் கற்றுக் வருகிறது..

சிரியாவில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் 2000000 பேர் மரணம். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் குறைந்தது 3000000 கொல்லப்பட்டனர் என்ற செய்தியை நாம் பார்த்துருக்கிறோம். அதை ரசித்து விட்டு அமெரிக்கர்களும் கடந்துருப்பார்கள்..

ஆனால் இன்று உலக மக்கள் யாரும் அமெரிக்காவின் மரணத்தை ரசிக்கவில்லை. மாறாக அனைத்துலக மக்களும் அமெரிக்காவிற்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்

உலகம் இதற்கு முன், இதுபோன்ற ஒரு பாதிப்பை சந்தித்த பொழுது தான், அதை தனக்கு சாதகமாக்கி அமெரிக்கா வல்லரசானது. பிறர் பாதிப்பில் தான் நாம் வல்லமை பெற முடியும் என்று நினைத்த அமெரிக்கா. வல்லமை அடைந்தது. வல்லரசும் ஆனது..

நம்மை போல் பிறர் நம் மீது வல்லமை செலுத்த நினைப்பார்களே என்று யோசிக்கவில்லை. இன்று உலக பாதிப்பு என்பதை விட, அமெரிக்காவின் பாதிப்பில் தான் சீனா வல்லரசாக வலம் வரப் போகிறது..

சீனா 89 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்புக்கான மருந்தை தர வியாபார ஒப்பந்தம் செய்துள்ளது.. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அமெரிக்கா சத்தமில்லாமல் பினங்களை புதைத்து வருகிறது.

மிக எளிதாக கொலை செய்து விட்டு சென்று விடும் அமெரிக்கர்களுக்கு, இறந்த பிணங்களை எவ்வளவு சிரமத்தோடுதான் அப்புறப் படுத்துவார்கள் என்பதை தற்போது தான் தெரிந்து கொண்டு வருகிறார்கள்..

மரண ஓலத்தில் மகிழ்ச்சி கண்ட மக்களின் மரண ஒலத்தில் நிச்சயம் நமக்கு மகிழ்ச்சி காண அமெரிக்கர் போல் நமக்கு மனம் இல்லை.

அனைத்து மக்களும் அமெரிக்க மக்கள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்.

முதல்முறையாக நாம் பதிவோம்

#Pray_for_America

#covid19 #coronavirus #2020

Monday, April 06, 2020

To Avoid Covid-19

Finally, some sensible advice.  From a GP Nurse in the UK.

To Avoid Covid-19

What I have seen a lot of are recommendations for how to try to avoid getting coronavirus in the first place ,
• good hand washing
• personal hygiene
• social distancing
-- but what I have NOT seen a lot of is advice for what happens if you actually get it, which many of us will.
So as your friendly neighborhood Nurse let me make some suggestions:

If you get Covid-19
You basically just want to prepare as though you know you’re going to get a nasty respiratory bug, like bronchitis or pneumonia. You just have the foresight to know it might come your way!

Things you should actually buy ahead of time (not sure what the obsession with toilet paper is?):

• Kleenex,

• Paracetamol,

• whatever your generic, mucus thinning cough medicine of choice is (check the label and make sure you're not doubling up on Paracetamol)

• Honey and lemon can work just as well!

• Vicks vaporub for your chest is also a great suggestion.

• a humidifier would be a good thing to buy and use in your room when you go to bed overnight. (You can also just turn the shower on hot and sit in the bathroom breathing in the steam).
(May not be required in India given good humidity levels)

• If you have a history of asthma and you have a prescription inhaler, make sure the one you have isn’t expired and refill it/get a new one if necessary.

• Meals This is also a good time to meal prep: make a big batch of your favorite soup to freeze and have on hand.

• Hydrate (drink!) hydrate, hydrate! Stock up on whatever  your favorite clear fluids are to drink - though tap water is fine you may appreciate some variety!

• For symptom management and a fever over 38°c, take Paracetamol rather than Ibuprofen.

• Rest lots. You should not be leaving your house!  Even if you are feeling better you may will still be infectious for fourteen days and older people and those with existing health conditions should be avoided!

• Wear gloves and a mask to avoid contaminating others in your house

• Isolate in your bedroom if not living alone, ask friends and family to leave supplies outside to avoid contact.

• Sanitize your bed linen and clothes frequently by washing and clean your bathroom with recommended sanitizers.

You DO NOT NEED TO GO TO THE HOSPITAL unless you are having trouble breathing or your fever is very high (over 39°C) and unmanaged with meds.
90% of healthy adult cases thus far have been managed at home with basic rest/hydration/over-the-counter meds.

If you are worried or in distress or feel your symptoms are getting worse

Preexisting risks If you have a pre-existing lung condition (COPD, emphysema, lung cancer) or are on immunosuppressants, now is a great time to talk to your Doctor or specialist about what they would like you to do if you get sick.

Children- One major relief to you parents is that kids do VERY well with coronavirus— they usually bounce back in a few days (but they will still be infectious), Just use pediatric dosing .

Be calm and prepare rationally and everything will be fine.
 This is to inform us all that the pH for corona virus varies from 5.5 to 8.5.

All we need to do, to beat corona virus, we need to take more of alkaline foods that are above the pH level of the Virus.

Some of which are:
 Lemon - 9.9pH
 Lime - 8.2pH
 Avocado - 15.6pH
 Garlic - 13.2pH
 Mango - 8.7pH
 Tangerine - 8.5pH
 Pineapple - 12.7pH
 Dandelion - 22.7pH
 Orange - 9.2pH

How do you know you have coronavirus?
1. Itching in the throat,
2. Dry throat,
3. Dry cough.
4.   High temperature
5.   Shortness of breath

So where you notice these things quickly take warm  water with lemon  and drink.

Do not keep this information to yourself only. Pass it to all your family and friends. God bless you all 🤞🏼

Sunday, April 05, 2020

மாண்புமிகு பிரதமர் அவர்களே!

Mr.மோடிஜீ!

ஏன் பொய் சொல்கிறீர்..??

நீங்கள் உலகின் முன்மாதிரியா????

மாண்புமிகு பிரதமர் அவர்களே!
கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை உலகமே பின்பற்றுவதாக ஒரு மகா பொய்யை....

எப்படி வெட்கமே இல்லாமல் உங்களால் சொல்ல முடிகிறது?????

நீங்கள் எப்படி உலகின் முன்னோடி என சொல்கிறீர்கள்???

உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் CAA சட்டங்களை நடைமுறைப் படுத்தியதால்.....

மக்கள் வெகுண்டெழுந்து போராடியதால்......

வடகிழக்கு மாநிலங்களில் உயிர்ப்பலிகள் விழத் தொடங்கிய  அந்த  நாட்களிலேயே.....

ரஷ்யா  சீனாவுடனான தனது அனைத்து  எல்லைகளையும் மூடி..... கொரோனாவிற்கு எதிரான தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது!!!!!

CAA விற்கு எதிராக எத்தனை  போராட்டங்கள் நடைபெற்றாலும்....

எந்தக் காரணத்தைக்  கொண்டும் CAA  NRC சட்டங்கள்  வாபஸ் வாங்கப்படாது....

என நீங்கள் நீட்டி முழங்கிய போதுதான்.....

ரஷ்யா கொரோனா பரவாமலிருக்க தனிமைப் படுத்தப்பட்ட மண்டலங்களை உருவாக்கியது!!!

லெனின் செஞ்சதுக்கம்...  தியேட்டர்...
மால்..
உடற்பயிற்சி கூடங்களை மூடத்  துவங்கி விட்டது!

நீங்கள் டிரம்புடன் நமஸ்தே நிகழ்ச்சி நடத்திய காலங்களில்தான்.....

ரஷ்யா
ஏப்ரல் 22ல்....
நடைபெற இருந்த அடிப்படை சட்ட மாறுதலுக்கான  பொதுவாக்பெடுப்பைக் கூட தொலைநோக்குப் பார்வையோடு தள்ளி வைப்பதாக அறிவித்தது!!!!

சிங்கப்பூர் அரசு  தொழுகைகளை தவிர்க்கவும்....

தொழுகைக்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்றவும்.....

கை குலுக்காமல் இருக்கவும்  அறிவுறுத்தி  இருந்தது!

தப்லீக் ஜமாத் விழா சிறப்பு ௮ழைப்பாளர்களான
தாய்லாந்து இசுலாமியர்களை.....

நீங்கள் எந்த பரிசோதனையும் இல்லாமல் உள்ளே நுழைய அனுமதித்து.....

கோட்டை விட்டிருந்த அதே காலக் கட்டத்தில் தான்.....

ரஷ்யா வெளிநாட்டினர் யாரும் ரஷ்யாவின் உள்ளே நுழையத்  தடை விதித்து  முடித்திருந்தது!!!!

சென்ற மாதம் நீங்கள் மான்கீபாத்தில் வீர உரை ஆற்றிக்  கொண்டிருந்த காலத்தில்தான்....

ரஷ்யா 500 பேர் கொண்ட சிறப்பு மருத்துவமனையையும்.....

கொரோனா நெருக்கடி காலத்தில் ராணுவம் செயல்பட வேண்டிய முறை பற்றிய ஒத்திகையையும் முடித்திருந்தது!!!!

WHO பலமுறை வற்புறுத்திய பின்பு....

ஒருநாள் ஊரடங்கைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருந்த போதுதான்.....

ரஷ்ய அதிபர் கொரோனாவை நாங்கள்   கட்டுக்குள்  வைத்துள்ளோம்...  கடவுளுக்கு நன்றி.... என மக்களிடம் உரை ஆற்றிக் கொண்டிருந்தார்!!!!

சிங்கப்பூர் ஒவ்வொரு வீட்டிற்கும் நான்கு முகக் கவசங்களை விநியோகித்து முடித்திருந்தது!!!!

நீங்கள் திடீரென 21 நாள் ஊரடங்கை அமுல்படுத்தி....

எங்களை 700.... 800 கிமீ நடந்தே சென்று சாகப் பணித்தீர்களே.....

அதற்கும் பல நாட்களுக்கு முன்பே....

ரஷ்யா,  தென்கொரியா போன்ற நாடுகள் படிப்படியாக ஊரடங்கை அமுல்படுத்தவும்.....

தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் 144 ஐ அமுல்படுத்தும் முன்பு எத்தனை நாட்கள் மக்களுக்கு அவகாசம் தரலாம் என்றும் சிந்திக்கவும் தொடங்கி விட்டது......

தென்னாப்பிரிக்கா நான்கு நாட்கள் மக்களுக்கு அவகாசம் கொடுத்தது!!!!!

நீங்களும்.....
உங்கள் ஆதரவு முதல்வர்கள்.....  அமைச்சர்கள்....  ஆளுநர்கள்.....
என பலரும் கையில் தட்டு கரண்டியுடன் சப்தம் செய்து....
மணி அடித்து கொண்டிருந்த வேளையில்....

தென்கொரியா தினமும்
10000 பேருக்கு பரிசோதனை செய்யத்  துவங்கியிருந்தது!!!!

ஹாங்காங் 14900 பேருக்கு பரிசோதனை செய்து....

19 பேருக்கு மட்டும் கொரோனா  இருந்ததாக  அறிவித்து  முடித்திருந்தது!!!!

உங்கள் நிதி அமைச்சர்....

இன்றுவரை
ஒரு ரூபாயும் எனக்கு வராத....
உருப்படாத திட்டங்களை.....
மனசாட்சியே இல்லாமல் அறிவித்த போது....

அமெரிக்கா ஒவ்வொரு அமெரிக்க பிரஜைக்கும்  90000 ரூபாய்....
மற்றும் ஒவ்வொரு  குழந்தைக்கும்  38000 ரூபாய்.....
உட்பட ஏறக்குறைய
165 லட்சம் கோடி  ரூபாய்களை....

கொரோனா நிவாரண நிதியாக  ஒதுக்கியிருந்தது!!!!

பிரதமரே!

நீங்கள் இன்று.... எங்களை
9 மணிக்கு.....
9 நிமிடம்....
விளக்கை அணைக்க  சொல்லிக் கொண்டிருக்கும்  போது.....

ரஷ்யா  150000 பேர்களுக்கு பரிசோதனை செய்து....
வெறும்
253 பேர்களுக்கு கொரோனா இருந்ததை அறிவித்த கையோடு.....

ஒரு வார முழு சம்பளத்தோடு ரஷ்யா முழுதும்  ஊரடங்கை  அறிவித்து விட்டது!!!!

உங்களின் தோழரும்.... கோமாளியும்.... இனவெறித்
திமிர்  பிடித்தவருமான டிரம்ப்....

தனது பரம்பரை எதிரிகளான....

சீனா,  ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான உதவிகளை கேட்டுப் பெற்றும் விட்டார்!!!!

மேலும் அடுத்த இரண்டு வாரங்களும்  அமெரிக்காவிற்கு  பெரும்  சோதனையான காலம் எனவும்,
2,40,000 பேர் வரை கொரோனாவால் இறக்கக் கூடும்  என்றும்....
மருத்துவ ஆய்வுகளை முடுக்கி  விட்டுள்ளதாகவும்....
வெண்டிலேட்டர்  பற்றாக்குறை  உள்ளதையும்.....  பிறநாடுகளில் இருந்து பெறுவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும்.... வெளிப்படையாக அறிவித்துள்ளார்!!!!

நீங்கள் என்றாவது கொரோனா இந்த நாட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்.....
என இதுவரை ஆய்வு செய்து மக்களுக்கு கூறியுள்ளீரா???????

பிற நாடுகளிலிருந்து பேரளவிலான உதவிகள் எதையாவது பெற்றுள்ளீரா??????

எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்படும் என கணித்துள்ளீர்களா?????

அதை எங்களுக்கு சொல்ல  நினைத்ததுண்டா????

இப்படி எதையும் சொல்லாமல்  விளக்கேற்றச் சொல்லும்  பிரதமரே....

இப்போது சொல்லுங்கள்.....

எதனால் உலகம் உங்களை பின்பற்றுவதாக  சொல்கிறீர்...?????

எந்த முன் ௭ச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத மூடத்தனத்தையா??????

திடீரென நான்கு மணி நேர அவகாசத்தில் அறிவித்த ஊரடங்கையா?????

பெரும்பாலான மக்களுக்கு பத்து பைசாவிற்கு உதவாத நிவாரணங்களையா????

பாத்திரங்களை தட்டி சத்தம் செய்ததோடு...

தெருவில் இறங்கி ஆட்டம் போட்ட  கோமாளித் தனத்தையா??????

பரிசோதனை செய்யப் பட்டவர்கள் சதவிகிதத்தில்.....  பாகிஸ்தானை விட குறைவாக உள்ளோமே அந்த நிலையையா????

பல லட்சம் மக்கள்....
பல நூறு கிலோமீட்டர்.....
நடந்தே செத்தார்களே.... அதையா?????

இல்லை எல்லாப் பிரச்சனையும் இசுலாமியரால் வந்தது....
என்று மக்கள் பொது புத்தியில் திணிக்க பாடாய் படுகிறீர்களே......
அந்த அசிங்கத்தையா???????

சொல்லுங்கள் பிரதமர்....

எந்த விடயத்தில் நீங்கள் உலக நாடுகளுக்கு....

முன்மாதிரியாக இந்த நாட்டை வழி நடத்தியுள்ளீர்கள்?????

சொல்லுங்கள்....  Mr_FRAME_MINISTER!

பகிர்வும் ௭ன் சில சேர்ப்புகளும்!

via whatsapp

Tuesday, March 31, 2020

Coronavirus Alert!

Coronavirus Alert!

#சீனாவா,#அமெரிக்காவா,#ரஷ்யாவா,அல்லது #இலுமினாட்டிகளா! அல்லது இவர்களில் எவருமே இல்லையா?

உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவத்தின் தளபதியும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் ...

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது ஏன் எதனால்!

இன்று பிரித்தானிய பிரதமரும் வீட்டுக்குள் அனாதரவாக முடக்கப்பட்டுள்ளார்.இது ஏன் எதனால்!

இன்று, உலகின் மிகப்பெரிய கேசினோ கிளப்பான அனைத்து லாஸ் வேகாஸ் ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன. இது ஏன் எதனால்!

இன்று, வருடத்துக்கு சுமார் 10 பில்லியன் டாலர்களை வருமானமாகப் பெரும்

ஆம்ஸ்டர்டாமின் விபச்சார வீதிகள் மற்றும் பார்கள், கால வரையின்றி இழுத்து மூடப்பட்டுள்ளன. இது ஏன் எதனால்!

இன்று உலகின் அனைத்து நாடுகளும் அரச அங்கிகாரத்துடன் இயங்கிய நிர்வாண கிளப்புகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இரவு விடுதிகள், பார்கள் மற்றும் பல உணவகங்களை மூடப்பட்டு விட்டன அதுவும் கால காலவரையின்றி,இது ஏன் எதனால்!

இன்றைய வரலாற்றில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பல்லாயிரக் கணக்கான இராட்சச விமானங்கள் தரையில் படுத்துறங்குகின்றன, இது ஏன் எதனால்?

வட்டி விகிதமும் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று உலக போலிஸ்காரன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

ஆக வட்டி ஒழிப்புக்கு காரணமாக இருந்தது, இது ஏன் எதனால்!

ரஷ்ய நாட்டு அதிபர் புடினும் சிரியா நாட்டின் அதிபரான பஸாரும் கலந்துரையாடி, சிரியாவில் போரை நிறுத்தி விட்டனர்.!இது ஏன் எதனால்!

எகிப்திய உளவுத்துறையின் தலைவரும், இன்னும் இரு பெரிய அதிகாரிகளும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகி, பின்னர் மரணித்திருந்தனர் .இது ஏன் எதனால்!.

உலகில் ஆணவமாய் சுற்றித் திரிந்த அறைகுறை நிர்வாண பெண்கள் கூட்டமெல்லாம், உடல் முழுதையும் சேர்த்து முகத்தையும் மூடிக் கொண்டு வீட்டுக்குள் அடங்கிப் போய் உள்ளனரே!இது ஏன் எதனால்!

கடந்த இரண்டு வாரங்களில் பங்குச் சந்தை இழந்த மொத்த தொகை,16 டிரில்லியன் டொலர்கள் . இதுவும்தான் ஏன் எதனால்!

தம்மால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என கொக்கரித்த உலகையாளும் ஜாம்பவான்கள் எங்கே! எங்களால் தான் எல்லாம்,எங்களால் மட்டும்தான் முடியும் என கூப்பாடு போட்டவர்களெல்லாம் எங்கே?

எங்கே,எங்கே?! கடவுளே இல்லை என வியாக்கீனங்கள் கூறும் நாத்திகர்கள் எங்கே:

நான்தான் பாட்ஷா,நான்தான் ராஜா என கும்மாளமிட்டவர்களும் எங்கே:நாங்களும் முஸ்லிம்கள்தான் என கூறிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்த நயவஞ்சகர்கள்தான் எங்கே;

துருப்பிடித்த இறும்புகளாக எல்லோரது குரல்களும் மங்கலாகி விட்டன,கரகரத்து விட்டன.

உலகமெனும் பூமி தனது பொறுமையை மீறியதால் அதனது இறைவனிடம் முறையிட்ட விளைவு தான் மனிதனுக்கு ஏற்பட்ட இந்த வினை,

இதற்கெல்லாம் யார் காரணமென பலரும் பலவாறான கருத்துக்களையும் மனித அரசர்களையும் குற்றம் சுமத்துகின்றனரா?

எல்லா வைத்தியர்களும் இன்று யாரை கையேந்துகின்றார்களோ!

அவன்தான் இதற்கெல்லாம் காரணம் என உணர்ந்து கொள்ளுங்கள்.!

யார் இன்றைய அரசனோ அவன்தான் இதற்கெல்லாம் காரணம் என தெரிந்து பூட்டுக்கான சாவியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

இதோ!அந்த சூத்திரதாரி இப்படி கூறுகிறான்:

“நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.

இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.

எம்மிடமிருந்து புதிதான யாதொரு உபதேசமும் அதனை அவர்கள் நிராகரித்து புறக்கணிக்கின்றவர்களாக இருந்தே தவிர வருவதில்லை.

(அல் குர்ஆன்-26:4,5)

#coronavirus #covid19 #isolation #quatantine #washyouhands #stayhome #staysafe

Wednesday, February 26, 2020

Sunday, February 23, 2020

குடியுரிமைச் சட்டம் கேள்விகளும் பதில்களும்

குடியுரிமைச் சட்டம் கேள்விகளும் பதில்களும்


1.
கேள்வி: பிரதமரும், முதலமைச்சரும் குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு வராது என்று சொன்ன பிறகு போராட்டம் நடத்துவது சரியா?

பதில்:  இருவரும் போராடும் மக்களை வெற்று வார்த்தைகளால் ஏமாற்றுகிறார்கள். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நாடு முழுமையும் என்.ஆர்.சி அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அரசின் முடிவைச் சொல்லிவிட்டார். அதில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2.
கேள்வி: முதல்வர், பிரதமர் வார்த்தைகளில் நம்பிக்கையில்லையா?

பதில்: நிச்சயமாக இல்லை. பணமதிப்பிழப்பின் போது 50 நாட்கள் அவகாசம் தாருங்கள். சரி செய்யவில்லையென்றால் என்னை தீ வைத்துக் கொளுத்துங்கள் என்றவர் தானே மோடி. நாடு முழுமையும் மக்கள் சீரழிந்ததைப் பார்த்தோமே.

3.
கேள்வி: என்.பி.ஆர் தானே எடுக்கிறார்கள். என்.ஆர்.சி. இப்போது இல்லையென்று சொல்லிவிட்டார்களே?.

பதில்: சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்பு வேறு. என்.பி.ஆர். என்பது வேறு. என்.பி.ஆர். தான் என்.ஆர்.சிக்கு அடிப்படை. சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் படி இது மேற்கொள்ளப்படவில்லை.

4.
கேள்வி: இதை ஆதரிப்பதால் தவறொன்றுமில்லை என தமிழக அமைச்சர்கள் பேசுகிறார்களே?

பதில்: ஏப்ரல் மாதம் என்.பி.ஆர் எடுப்போம் என்று தமிழக அரசு சொல்லுகிறது. ஆனால் பீஜேபி ஆளும் மாநிலங்களும், பீஜேபி ஆதரவு மாநில முதல்வர்களும் இதை எடுக்க மாட்டோம் என மறுத்துள்ளார்கள். அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்?

5.
கேள்வி: குடியுரிமையை நிரூபிப்பதில் என்ன தவறு?

பதில்: குடியுரிமையை யாரிடம் நிரூபிக்க வேண்டும்? எதற்காக நிரூபிக்க வேண்டும்.

* காசியில் இருக்கும் லட்சக்கணக்கான அகோரிகளுக்கு கோவணம் கூட இல்லை. அவர்களிடம் ஆவணம் கேட்பார்களா? அவர்களால் நிரூபிக்க முடியுமா?

* 15 கோடி ஆதிவாசி மக்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்?

* நரிக்குறவர்களிடம் என்ன ஆவணம் இருக்கும்? அவர்களால் நிரூபிக்க முடியுமா?

* மாநிலம் விட்டு மாநிலம் வேலைக்காக அலைபவர்கள் பலகோடி. அவர்களால் நிரூபிக்க முடியுமா?

* வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 2 கோடி பேர். அவர்கள் இங்கு வந்து நிரூபித்துவிட்டு செல்ல வேண்டுமா?

* 70 ஆண்டுகால விடுதலைக்குப் பிறகும் 30% பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். அவர்களிடம் என்ன ஆவணம் இருக்கும்?

6.
கேள்வி: இதில் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என முதல்வர் கேட்கிறாரே?

பதில்: இவர் ஒரு விசயத்திற்கு இப்போது பதில் சொல்லட்டும். குடியுரிமைச் சட்டத்தின் படி இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை. இலங்கை கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆருக்கு குடியுரிமை வழங்க இவர்களால் முடியுமா? அவருக்கு குடியுரிமை உண்டா? இல்லையா? ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தாருக்கே இங்கு குடியுரிமை இல்லை.

 7.
கேள்வி: இதில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு உண்டா?

பதில்: இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் பாதிப்பு உண்டு.

8.
கேள்வி: சிறுபான்மையினர் வாக்குவங்கிக்காக போராட்டம் தூண்டப்படுகிறது என்கிறார்களே?

பதில்: சிறுபான்மையினர் வாக்கு வங்கி என்றால், அவர்கள் பெரும்பான்மை வாக்கு வங்கியை உறுதிப்படுத்த இதைக் கொண்டு வந்தார்களா?
சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக பேசினால் வாக்குவங்கி.
பெரும்பான்மை என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் சொல்வது தேசியமா?

9.
கேள்வி: சட்ட விரோத குடியேறிகளை கண்டறிய வேண்டாமா?

பதில்: ஊரில் உள்ள ஒரு திருடனை கண்டறிய, ஊரில் உள்ள அனைவரும் நாங்கள் திருடர்கள் இல்லையென்று நிரூபிக்க வேண்டுமா?

10.
கேள்வி: இதற்கு தீர்வுதான் என்ன?

பதில்: கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சட்டம் திரும்பப்பெறப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.


கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் வீண் வேலை நிறுத்தப்பட வேண்டும்.
3000 கோடிக்கு படேலுக்கு சிலை வைத்த குஜராத்தில், அந்த பணத்தை வைத்து குடிசை வீடுகளை மாற்றியிருந்தால், இப்போது சுவர் எழுப்பி அவமானப்பட வேண்டிய அவசியம் வந்திருக்காது.

Sunday, February 16, 2020

கட்டாயம் படியுங்கள் மோடிஷாவின் குரூரம் புரிய!

கட்டாயம் படியுங்கள் மோடிஷாவின் குரூரம் புரிய! 1940 ல் உள்ள பத்திரம் என்னிடம் இருக்கிறது.. ஆனால் எனக்கே இதை படித்து முடிக்கும்போதே பகீரென்றிருக்கிறது..
அப்பாவி மக்களின் நினைத்துப்பாருங்கள்... எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்..

பொறுமையாக படியுங்கள்;
#அவசியம் #படியுங்கள்...

CAA(CAB) & NRC ...

முடிந்தளவு சுருக்கமாக விவரிக்கிறேன் ...

NRC. சொல்வது என்ன ...

"Simply being born in India or having parents who were born in India is not enough ...The NRC requires you or your parents to have been born before a certain cut -off date and the cut-off date is March 24,1971 ..."

புரிகின்றதா வில்லங்கம் ...

நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல ...

நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...!

பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் ...

ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...

சரி ...அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் ...

LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் ...

LIST -A ...

1.Electoral rolls upto March 25,1971
2.NRC of 1951
3.Land and Tenancy Records
4.Citizenship certificate
5.Passport
6.Bank or LIC documents
7.Permanent Residential Certificate
8.Educational certificates and court orders
9.Refugee Registration certificate

LIST -B

1.Land documents
2.Board or university certificates
3.Bank/LIC/Post office records
4.Birth certificate
5.Ration card
6.Electoral rolls
7.Other legally acceptable documents
8.A circle officer or Grama panchayat secretary certificate for married women

விஷயம் என்னவென்றால் LIST - A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இர்ர்க்க வேண்டும் ...அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இர்ர்க்க வேண்டும் ...!!

வில்லங்கம் புரிகிறதா ...

இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் ...!!

உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ...

உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் ...!

அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் ...!

ஆக ...மேற்கூரிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் ...மனைவி,குழந்தைகளுடன் ...!!

மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் ...

அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் ...!!

அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று ...

இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே ...!

பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் ...!!

இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா ...

நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது ...

1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் ...

நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் ...

இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் ...!

அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...

இளம்பெண்களின் கதி என்னாகும் ...

சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது ...!

குடியுரிமை தருவது என்றால் சும்மாவா ...எது வேண்டுமானாலும் நடக்கும் ....

ஒரு வழக்கறிஞராக ...

நான் சொல்வது இந்த CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது ...

என உறுதியாகச் சொல்லுவேன் ...

NRC யைப் பொறுத்த வரை ...

நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம்,துறைமுகத்தை விற்போம்,நிலத்தை விற்போம்,பொதுத் துறை நிறுவனங்களை விற்போம் ...

மீறிக் கேள்வி கேட்டால் ...

நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் ...நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் ...

டாகுமெண்ட் இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp ...

முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் ...

தட்ஸ் ஆல் ...

- பகிரி

Wednesday, January 15, 2020

The Aryans

The Aryans

About 1500 B.C., groups of warlike people left their homes in central Asia, possibly near the Caucasus Mountains, and came to India. These people called themselves arya (kinsmen or nobles). They are now known as the Aryans. The Aryans are said to have entered India through the fabled Khyber pass, around 1500 BC. They intermingled with the local populace, and assimilated themselves into the social framework. They adopted the settled agricultural lifestyle of their predecessors, and established small agrarian communities across the state of Punjab. When the Aryans arrived in India, they found people with an advanced civilization living there. These people, called the Dravidians, lived in towns and grew crops. The Aryans gradually conquered the Dravidians and drove some of them southward. Eventually, the Aryans extended their rule over all of India except the south.

The Aryans tended sheep, goats, cows, and horses. They measured their wealth in herds of cattle. Over time, the Aryans settled into villages. Each village or group of villages was led by a headman and council. The Aryans are believed to have brought with them the horse, developed the Sanskrit language and made significant inroads in to the religion of the times. All three factors were to play a fundamental role in the shaping of Indian culture. Cavalry warfare facilitated the rapid spread of Aryan culture across North India, and allowed the emergence of large empires. Sanskrit is the basis and the unifying factor of the vast majority of Indian languages.

The Aryans did not have a script, but they developed a rich tradition. They composed the hymns of the four vedas, the great philosophic poems that are at the heart of Hindu thought. As the Nobel Laureate, Rabindranath Tagore expressed it, "The hymns are a poetic testament of a people's collective reaction to the wonder and awe of existence....A people of vigorous and unsophisticated imagination awakened at the very dawn of civilisation to a sense of inexhaustible mystery that is implicit in life."

A settled lifestyle brought in its wake more complex forms of government and social patterns. This period saw the evolution of the caste system, and the emergence of kingdoms and republics. The events described in the two great Indian epics, the Ramayana and the Mahabharata, are thought to have occurred around this period. (1000 to 800 BC).

The Aryans were divided into tribes which had settled in different regions of northwestern India. Tribal chiefmanship gradually became hereditary, though the chief usually operated with the help of advice from either a committee or the entire tribe. With work specialisation, the internal division of the Aryan society developed along caste lines. Their social framework was composed mainly of the following groups : the Brahmana (priests), Kshatriya (warriors), Vaishya (agriculturists) and Shudra (workers). It was, in the beginning, a division of occupations; as such it was open and flexible. Much later, caste status and the corresponding occupation came to depend on birth, and change from one caste or occupation to another became far more difficult.